districts

img

திருக்கடையூர் தமிழ்நாடு ஓட்டல் நிர்வாகம் ஊழியர்களை துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு சிபிஎம், ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்

மயிலாடுதுறை, செப்.1 - மயிலாடுதுறை மாவட்டம் திருக் கடையூரில் இயங்கி வருகிற தமிழ் நாடு அரசு சுற்றுலா துறையின் கட்டுப் பாட்டிலுள்ள தமிழ்நாடு ஓட்டலில் பணி செய்யும் ஊழியர்களை இழி வாக நடத்துவதாகவும், காரணமின்றி பணிநீக்கம் செய்வதாகவும் குற்றம் சாட்டி ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கட்சி யினருடன் இணைந்து ஓட்டலை முற்று கையிட்டு ஊழியர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

திருக்கடையூரில் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் தமிழ்நாடு ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் தரங்கம்பாடியை சுற்றி பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் என நாள்தோறும் ஏராளமானோர் தங்கி வருகின்றனர்.

அரசுக்கு வருவாய் ஈட்டி வருகிற இந்த ஓட்டலில், கணக்காளராக பணி யாற்றும் நபர் என்பவர் சக ஊழியர் களை மிக கேவலமாக நடத்துவதாக புகார்கள் தொடர்ந்து வருகின்றன. 17 பேருக்கு மேல்  வேலை செய்ய வேண்டிய இந்த ஓட்டலில், 3 பெண் ஊழியர்கள் உட்பட 7 பேர் மட்டுமே வேலை செய்வதாக கூறப்படுகிறது.

சமையற்கூடத்தில் வேலை செய்ப வர்களை, அறைகளில் பெட்ஷீட் போடுவது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளையும் செய்ய கட்டா யப்படுத்துகின்றனராம். உணவு பரிமாறும் ஊழியரை, கழிப்பறையை கழுவச் சொல்வதால், விடுதிக்கு சாப்பிட வருபவர்கள் முகம் சுளிக்கும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது. குறிப் பாக அந்த ஓட்டலை நிர்வகிக்கிற பெண் கழிப்பறைக்கு சென்று விட்டு, சக பெண் ஊழியர்களை “டாய்லட்டில போய் தண்ணீ ஊத்திட்டு வா” என்று அதிகாரதொனியுடன் துன் புறுத்துகிறார் என பாதிக்கப்பட்ட வர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். 

சில நாட்களுக்கு முன்பு இங்கு பணியாற்றிய ஊழியர்கள் தீபன் கோஷ், கோபி ஆகியோர், நிர்வாகம் தந்த வெற்று காகிதத்தில் கையெழுத்துப் போடவில்லை என்பதால் காரணமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

8 மணி நேர வேலைக்குப் பதிலாக 12 மணி நேரம் வேலை வாங்குகின்ற னர். 15 நாள் மட்டுமே வேலை, மீதி நாள் வேலை இல்லையென வேறு நபர்களை பணிக்கு நியமிப்பது, அதி காலையிலேயே வேலைக்கு வரும் பெண்கள், ஓட்டலில் சாப்பிட்டால் அதற்கு கட்டணம் வசூலிக்கின்றனர். ரூ.17 ஆயிரம் சம்பளத்தில், 12 ஆயி ரத்து 500 ரூபாய் மட்டுமே ஊழியர் களுக்கு தந்துவிட்டு மீதியை முறை கேடு செய்வதாகவும் கூறப்படுகிறது. எந்த ஒரு காரணமும் இல்லாமல், நினைத்த நேரத்தில் ஊழியர்களை ‘வேலைக்கு இனி நீ வர வேண்டாம்’ என ஓட்டல் நிர்வாகம் கூறுவதாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழ்நாடு ஓட்டலின் இந்த நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.பரமசிவம் தலைமையில், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப் பினர் கணேசன் மற்றும் ஓட்டல் நிர்வா கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர் கள் கண்டன முழக்கங்களைஎழுப்பினர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடந்த போராட்டத்தையடுத்து, தகவ லறிந்து வந்த பொறையார் காவல் ஆய்வாளர் ஜெயந்தி, ஓட்டலின் பொறுப்பு மேலாளர் பைசல் ஆகி யோர் பொறையார் காவல் நிலை யத்தில் பேச்சுவார்த்தை நடத்தி னர். அதில், ஊழியர்களின் கோரிக்கை யை நிறைவேற்றுவதாக உறுதி யளித்ததையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.